திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அடுத்த ஜெய்பீம் நகரை சேர்ந்த சமூக ஆர்வலரும் ஏபிஜே அப்துல் கலாம் இயற்கை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளருமானவர் ராஜா (43). இவர் அதே பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை தன்னுடைய சொந்த செலவில் வைத்துள்ளார்.
அது மட்டுமின்றி ராஜா, திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் மரக் கன்றுகளும் இயற்கை மீட்பு அறக்கட்டளை சார்பாக சுமார் 14 ஆயிரம் மரக் கன்றுகளும் வைத்துள்ளதாக தெரிவிக்கிறார்.
இந்நிலையில் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சி துறை சார்பாக மகாத்மா ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஜெய்பீம் நகரில் குறுங்காடு அமைத்துள்ளதாகவும் அதற்காக சுமார் 3லட்சத்து 5ஆயிரத்து 900 ரூபாய் செலவு செய்துள்ளதாகவும் திடீரென பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.