திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (62). இவர் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.
இச்சூழலில் இவருக்கு சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பணிக்கு செல்லாமல், சில மாதங்களாக இவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் தனது மகள், மகன் அனைவரும் வீட்டில் வந்து தங்கியுள்ளதால், தன்னால் முயன்ற பண உதவிகள் எதையும் செய்ய முடியவில்லை என அடிக்கடி தனது மனைவிடம் கூறிவருவாராம்.
இதனால் மேற்கொண்டு மனவேதனை அடைந்த பிரபாகரன், நேற்று இரவு வீட்டில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து அதிகாலை, பிரபாகரனை வீட்டில் இருந்தவர்கள் பல இடங்களில் தேடினர்.