தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயிலில் கடத்தி வரப்பட்ட 13 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது - ரயிலில் கடத்தி வரப்பட்ட 13 கிலோ கஞ்சா பறிமுதல்

காட்பாடியில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 13 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச்சேர்ந்த இளைஞரைக் கைது செய்துள்ளனர்.

ஒருவர் கைது
ஒருவர் கைது

By

Published : May 30, 2022, 4:40 PM IST

வேலூர்:காட்பாடி ரயில் நிலையத்தில் காட்பாடி ரயில்வே இருப்புப்பாதை காவல் நிலைய ஆய்வாளர் சித்ரா, சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயகுமார் தலைமையிலான காவலர்கள் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுகிறதா என சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஒடிசா மாநிலம், புபனேஷ்வரில் இருந்து வந்த பெங்களூரு கன்டோன்மென்ட் விரைவு ரயிலில் D2 கோச்சில் சோதனை மேற்கொண்டபோது, கழிவறை அருகே மூன்று பைகளில் 13 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து 13 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து, ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சக்ரதர் ​​செட்டி என்பவரை காவல் துறையினர் கைது செய்து ரயில்வே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: 2 கிலோ தங்க செயினில் 3 மி.கி. மட்டுமே தங்கம்: ரூ.1 லட்சத்துடன் தப்பியவர்களை தேடும் போலீஸ்!

ABOUT THE AUTHOR

...view details