தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருமகள் மீது மாமியார் காவல் நிலையத்தில் புகார் - ரகுபதியூர் பகுதி

தனது மகன் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, மருமகள் மீது மாமியார் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

காவல் துறையினர் விசாரணை
காவல் துறையினர் விசாரணை

By

Published : Feb 7, 2022, 8:21 AM IST

திருப்பத்தூர்: ரகுபதியூர் பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் (29) என்பவர் அதே பகுதியில் அழகுநிலையம் நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி பெயர் விசித்ரா (23). கடந்த 4ஆம் தேதி காலையில் நவீன்குமாரை, விசித்ராவின் அத்தை மகனான சீனிவாசன் (24) என்பவர் இருசக்கர வாகனத்தில் மது அருந்த அழைத்துச் சென்றுள்ளார்.

பிறகு மதியம் 12 மணிக்கு அண்ணாநகர் கட்டியானூர் பகுதியில் அளவிற்கு அதிகமாக மது அருந்திவிட்டு வாயில் நுரையுடன் கீழே விழுந்துள்ளாதாக கூறி தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனன் மற்றும் சீனிவாசன் ஆகியோர் நவீன்குமாரை அவரது வீட்டில் விட்டுச் சென்று உள்ளனர்.

இரவு ஏழு மணிக்கு நவீன்குமாரின் மனைவி விசித்ரா தனது கணவன் சுயநினைவின்றி இருப்பதாக உறவினர்களிடம் கூறியுள்ளார். திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு நவீன் குமாரை அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு முன்பே உயிரிழந்து விட்டதாகக் கூறியுள்ளனர். இதன் பின்னர் நவீன் குமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

விசித்ரா செல்போன் மூலம் அதிக நேரம் அத்தை மகன் சீனிவாசனுடன் பேசியுள்ளதாக அவரது மாமியார் கூறியுள்ளார். இதனால் மாமியார், தனது மகன் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி மருமகள் விசித்ரா மீது திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பத்திரப் பதிவில் முறைகேடு: மூவர் மீது வழக்குப் பதிவு

ABOUT THE AUTHOR

...view details