தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 21, 2020, 9:52 AM IST

ETV Bharat / state

திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 ஆயிரத்தும் மேற்பட்டோர் வீடுகளில் தனிமை!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 68 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

More than 3 thousand persons under home quarantine in tirupattur
திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 ஆயிரத்தும் மேற்பட்டோர் வீடுகளில் தனிமை

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 68 பேர் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 275ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 3 ஆயிரத்து 587 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 80 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை மாவட்டத்தில் 74 ஆயிரத்து 766 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 2 ஆயிரத்து 127 பேர் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர். மேலும் 3 ஆயிரத்து 597 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஏடிஎம் இயந்திரத்தில் பணம் திருட முயற்சி: அபாய ஒலி ஒலித்ததால் தப்பியோடிய திருடர்கள்

ABOUT THE AUTHOR

...view details