திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் செப்டம்பர் 10ஆம் தேதி மனிதநேய ஜனநாயக கட்சி முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த தோட்டாமணி (எ) மணிகண்டன் செப்டம்பர் 21ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்து சைதாப்பேட்டை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
இதனையடுத்து தோட்டாமணியை வாணியம்பாடி நகர காவல் துறையினர், இன்று (செப்.28) பலத்த பாதுகாப்புடன் வாணியம்பாடி குற்றவியல் நீதித்துறை நடுவர் காளிமுத்து வேல் முன்பு ஆஜர்படுத்தினர்.