தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மக்கள் ஒத்துழைப்பு தராததால் கரோனா அதிகமாகிறது' - minister Veeramani opens medical camp for elders

திருப்பத்தூர்: மக்கள் ஒத்துழைப்பு அளிக்காமல் இருப்பதால் கரோனா தொற்று அதிகமாகிறது என்று அமைச்சர் வீரமணி தெரிவித்தார்.

minister Veeramani opens medical camp for elders in tirupattur
minister Veeramani opens medical camp for elders in tirupattur

By

Published : May 30, 2020, 6:56 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 60 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான மருத்துவ முகாமை வணிக வரித்துறை அமைச்சர் வீரமணி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், "வயதான குடிமக்களை கரோனா எளிதில் தாக்கும். அதை தடுக்கும் வகையில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்களுக்கு உரிய மருத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன" என்றார்.

இந்த மருத்துவ முகாமில் மாவட்ட ஆட்சியர் சிறப்புரை ஆற்றினார். வயதானோர் பலர் இந்த முகாமில் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க... அம்மா உணவகத்தில் அமைச்சர் கே. சி.வீரமணி ஆய்வு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details