தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 10, 2021, 3:10 PM IST

ETV Bharat / state

கரோனா தடுப்பூசி கட்டாயம் போடவேண்டும்.. அமைச்சர் எ.வ.வேலு

அனைவரும் கரோனா தடுப்பூசி கட்டாயம் போடவேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

எ.வ.வேலு
பொதுப்பணித்துறை அமைச்சர்

திருப்பத்தூர்: மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் பல்துறை பயனாளிகளுக்கு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி ஜவகர் தலைமையில் நவ. 09 ஆம் தேதி, அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

நலத்திட்ட உதவிகள்

இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை போன்ற துறைகளில் உள்ள 3,660 பயனாளிகளுக்கு 32 கோடியே 19 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், மாவட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு பழங்குடியினர் ஜாதி சான்று, இலவச வீட்டு மனை பட்டா, இலவச சலவைப் பெட்டி, மூன்று சக்கர வாகனம் என்று 66 பயனாளிகளுக்கு ரூ. 49 லட்சத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் பல்துறை பயனாளிகளுக்கு

அப்போது செய்தியாளர்களிடத்தில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்று முற்றிலும் குறையவில்லை என்றும் குறிப்பாக, திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நோய்த்தொற்று உள்ளது என்று கூறினார்.

வீடு தேடி மருத்துவம் திட்டம்

கரோனா் தொற்றை தடியால் அடித்தால் கூட, அது போகாது/ தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.இந்தியாவில் முதல் முறையாக காப்பீட்டுத் திட்டத்தை உருவாக்கியவர், கருணாநிதி தான். ஏழை எளிய மக்கள் எந்த ஒரு தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக மருத்துவம் பார்த்துக் கொள்ளும் வசதியை உருவாக்கியுள்ளார்.

தற்போது, அவருக்குப் பிறந்த பிள்ளையான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோ "மக்கள் யாரும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம்; உங்களை தேடி மருத்துவர்கள் வருவார்கள்; அதற்காகவே 'வீடு தேடி மருத்துவம்' என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளார்" என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, திருப்பத்தூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ், நல்லதம்பி, வில்வநாதன், மற்றும் அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியாக முனீஸ்வரர் நாத் பண்டாரி - கொலீஜியம் பரிந்துரை !

ABOUT THE AUTHOR

...view details