வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூர் மாவட்டத்தைப் பிரித்தப் பின்னர் பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திலிருந்து 26 கிராமங்களையும், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து இரண்டு கிராமங்களையும் மாதனூர் ஊராட்சியில் இணைக்க அரசாணை வெளியிட்டத்தை கண்டித்தும், மக்களிடம் கருத்து கேட்காமலேயே ஊராட்சிகளை இணைத்ததையும் கண்டித்து மேல் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இன்று ஊராட்சி அலுவலகம் முன் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில், பல ஆண்டுகளாக ஆலங்காயம் ஒன்றியத்திலிருந்த கிராமத்தை மக்களிடம் கருத்து கேட்காமலேயே மாதனூர் ஊராட்சியில் இணைத்துள்ளனர் என்றனர். மேலும் மலை கிராமமான மேல் குப்பம் கிராம மக்கள் மாதனூர் செல்ல இரண்டு பேருந்துகள் மாறி 45 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டிய நிலையும், மக்கள் வீண் அலைச்சலுமே மிஞ்சும் என்றும் குறிப்பிட்டனர்.