தமிழ்நாடு

tamil nadu

திருப்பத்தூர் அருகே விவசாயி கொடூர கொலை: திமுக நிர்வாகி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு!

By

Published : Dec 13, 2022, 12:37 PM IST

வாணியம்பாடி அருகே விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக பிரமுகரின் கணவர் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், 17 வயது சிறுவன் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

land
land

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வெள்ளகுட்டை பகுதியில் நேற்று(டிச.12) ராமமூர்த்தி என்ற விவசாயி நிலத்தகராறில் இருந்த முன் விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ராம மூர்த்தியின் மனைவி பூங்கோதை ஆலங்காயம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராமமூர்த்தியின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட திமுக ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவர் சங்கீதாவின் கணவர் பாரி உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

அதில் மகேந்திரன் மற்றும் அவரது மகனான 17 வயது சிறுவன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 6 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'மெட்ரோ' பட பாணியில் சொகுசு வாழ்க்கைக்காக வாழ்வை பறிகொடுத்த கல்லூரி மாணவர்!

ABOUT THE AUTHOR

...view details