தமிழ்நாடு

tamil nadu

டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு!

திருப்பத்தூர்: தேங்காய் ஏற்றிச்சென்ற டிராக்டர் பின்சக்கரத்தில் சிக்கி பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

By

Published : Mar 1, 2020, 10:24 PM IST

Published : Mar 1, 2020, 10:24 PM IST

tiruppathur Accident lady dead, திருப்பத்தூர் சாலை விபத்து
திருப்பத்தூர் சாலை விபத்து

திருப்பத்தூரை அடுத்த சந்திரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சுரேஷ் (36). இவர் ஆலங்காயம் பகுதியிலுள்ள இவருடைய உறவினர் இறுதிச்சடங்கு காரியத்திற்கு இவரது மனைவி கல்பனா (33), மகன் மகேஷ் (10) இரண்டாவது மகள் தமிழிசை (6), தாயார் இந்திராணி (55) ஆகிய அனைவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து ஆலங்காயம் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

அப்போது திருப்பத்தூரை அடுத்த சி.கே.சி. திரையரங்கம் எதிரில் செல்லும்போது நிலைதடுமாறி தேங்காய் பாரம் ஏற்றிச்சென்ற டிராக்டர் பின் சக்கரத்தில் சிக்கி, சுரேஷின் தாயார் இந்திராணி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், சுரேஷுக்கு கால் முறிவு ஏற்பட்டது. இவரின் இரண்டு குழந்தைகளும், மனைவியும் லேசான காயங்களுடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இந்திராணியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல் துறையினர் இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் செல்லக்கூடாது என்றும், தலைக்கவசம் அணிவதின் அவசியம் குறித்து ஆங்காங்கே விழிப்புணர்வு பதாகைகள் வைத்தும், விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தும், ஒரு சில வாகன ஓட்டிகளின் அலட்சியத்தினால் விலை மதிக்க முடியாத உயிரிழப்பு ஒரு சில இடங்களில் நடந்தேறி வருவது கவலையளிப்பதாக சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details