திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் வருவாய்த்துறையினர், காவல் துறையினர் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக கரோனா நோய் தடுப்புப் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைப் பயன்படுத்தி மணல் கொள்ளையர்கள் இரவு பகலாக பாலாறு மற்றும் அதன் கிளை ஆற்றுப் பகுதிகளிலிருந்து அனுமதியின்றி மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்களில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நடைபெறும் மணல் கொள்ளை குறித்து சமூக ஆர்வலர்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.