திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் காப்புக்காட்டுப்பகுதிகளில் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து வனவிலங்குகளை வேட்டையாடுவதாக திருப்பத்தூர் வன அலுவலருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி நேற்றிரவு ஆலங்காயம் எல்லையான மங்களம் காப்புக்காட்டுப்பகுதிகளில் ஆலங்காயம் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போது நான்கு பேர் கொண்ட கும்பல் வனப்பகுதியில் தீ வைத்து தீயிலிருந்து தப்பித்து வனப்பகுதியிலிருந்து வெளியேறிய கீரிப்பிள்ளையை வேட்டையாடி எடுத்துச்செல்வது தெரியவந்தது.