திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் ஆஸ்டன் காலணி என்ற தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு வேலைக்காக வாணியம்பாடி நெக்குந்தி பகுதியில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் வேனில் ஆம்பூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர்.
அப்போது, வேன் சோலூர் பகுதியில் வந்துக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புகளை உடைத்து எதிர் திசையில் வந்து கொண்டிருந்த சுண்ணாம்பு மூட்டை ஏற்றி வந்த லாரியின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்கள்ளானது. இதில், வேன் அப்பளம் போல் நொறுங்கியது.