தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிணற்றில் விழுந்த மாடு: போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்! - பொதுமக்கள் வாழ்த்து

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே வேளாண்மை நிலத்தில் இருக்கும் 90 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த மாட்டினை 3 மணி நேரம் போராடி, தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.

firefighters-rescue-a-cow-that-fell-into-a-well-after-a-3-hour-struggle
firefighters-rescue-a-cow-that-fell-into-a-well-after-a-3-hour-struggle

By

Published : Oct 7, 2020, 10:58 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடப்புதுபட்டு பகுதியைச் சேர்ந்த விவசாயி வேலு (70). இவர் அதேபகுதியில் தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்துவருகிறார். இந்நிலையில் தனது நான்கு பசு மாடுகளையும் மேய்ச்சலுக்காக, தனது நிலத்தில் விட்டுள்ளார்.

கிணற்றில் விழுந்த மாட்டினை 3 மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்ட தீயணைப்புத்துறையினர்

ஆப்போது ஒரு பசுமாடு, அருகிலிருந்து 90 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இதனையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் அப்பகுதி பொதுமக்களின் உதவியுடன் சுமார் 3 மணி நேரம் போராடி மாட்டை உயிருடன் மீட்டனர். இதையடுத்து மாட்டை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:ரப்பர் விவசாயத்தையும் விட்டுவைக்காத கரோனா - அரசிடம் உதவி கேட்கும் விவசாயிகள்

ABOUT THE AUTHOR

...view details