திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த நரியனரி பகுதியில் வசித்து வருபவர் ரத்தினம் என்பவரின் மகன் வேலு இவர் சிவகுமார் என்பவருக்கு சொந்தமான ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். தொழிற்சாலையில் விலை உயர்ந்த 15 மெஷின்கள் மற்றும் ஊதுபத்தி தயாரிக்கும் உபகரணங்கள் இருந்துள்ளன. இந்த ஊதுபத்தி தயாரிக்கும் கம்பெனியில் 20க்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
வழக்கம்போல் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் ஊதுபத்தி தயாரிக்கும் பணியை மேற்கொண்ட பின்பு சுமார் 5 மணி அளவில் தொழிற்சாலையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் மின்கசிவு ஏற்பட்டு சுமார் 7 மணி அளவில் தொழிற்சாலை ஜன்னல் வழியாக புகை வருவதை கண்டு தொழிற்சாலை உரிமையாளர் சிவகுமாருக்கு தகவல் தெரிவித்தனர்.