தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 27, 2021, 9:08 AM IST

ETV Bharat / state

11 வயது மகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் தந்தை கைது!

திருப்பத்தூர்: தனது 4ஆவது மனைவியின், 11 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

11 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது!
11 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது!

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 47 வயது நபர். இவர் பைனான்ஸ், ரியல் ஸ்டேட் தொழில் செய்தி வருகிறார். இவருக்குத் திருமணமாகி முதல் மனைவிக்கு 1 ஆண் 1 பெண் குழந்தை உள்ள நிலையில், முதல் மனைவி இறந்ததால் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அவருக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளன.

இரண்டாவது மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றதால், மூன்றாவது திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு தொழில் காரணமாக சென்னையில் இருந்தபோது அங்கே 2 குழந்தையின் தாயுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் தன் கணவனைப் பிரிந்து இவருடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது மற்ற குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர், 4ஆவது மனைவியின் 11 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது குறித்து, தனது தாயாரிடம் சிறுமி சம்பவத்தை கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, சிறுமியின் தாய் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details