தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்வில் தோல்வி; 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை - 10ம் வகுப்பு மாணவி தற்கொலை

ஆம்பூர் அருகே பத்தாம் வகுப்பில் தோல்வியுற்ற மாணவி பெற்றோர்கள் கண்டித்ததால், மன உளைச்சலில் இருந்த மாணவி இன்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

தேர்வில் தோல்வி; 10ம் வகுப்பு மாணவி தற்கொலை
தேர்வில் தோல்வி; 10ம் வகுப்பு மாணவி தற்கொலை

By

Published : Jul 20, 2022, 10:19 PM IST

திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த அயித்தம்பட்டு பகுதியைச் சேர்ந்த மாணவி அருகில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். கடந்த பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வில் கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் மாணவி தோல்வி அடைந்திருந்தார். இதனால் அவரின் பெற்றோர் அடிக்கடி திட்டிவந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மாணவி சிறிது நாட்கள் அவரது பாட்டி வீட்டில் இருந்த நிலையில், நேற்று மீண்டும் பத்தாம் வகுப்பு துணைத்தேர்விற்கு தயாராக தனது சொந்த ஊருக்குச் சென்றார். அப்பொழுது மாணவி கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிலிருந்து மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி தீவைத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மாணவியின் அலறல் சத்தம் கேட்ட அவரது தாயார் மற்றும் அக்கம்பக்கத்தினர் காப்பற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால் தீ உடல் முழுவதும் பரவியதால் பலத்த தீக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மாணவி உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உமராபாத் காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெற்றோர் திட்டியதால் மன உளைச்சலில் மாணவி தீயிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம்: உயிரிழப்பதற்கு முன்பு பள்ளி வகுப்பில் பங்கேற்ற காட்சி!

ABOUT THE AUTHOR

...view details