தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை: ரூ. 6 லட்சம்,6 சவரன் தங்க நகை பறிமுதல் - ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், காரில் கொண்டு செல்லப்பட்ட 6 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

6 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 6 சவரன் தங்க நகை பறிமுதல்
6 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 6 சவரன் தங்க நகை பறிமுதல்

By

Published : Mar 31, 2021, 7:37 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழ்நாடு ஆந்திர எல்லை வெலதிகாமணிபெண்டா பகுதியில், ஆம்பூர் தேர்தல் அலுவலர் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர்.

அப்பொழுது, ஆந்திராவிலிருந்து தமிழ்நாடு நோக்கி சென்ற காரை மறித்து சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி 6 சவரன் தங்கம் மற்றும் ரூ. 6 லட்சம் ரொக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அதனை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், கரூவூலத்தில் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க:பாஜகவுக்கு எதிராக 'ஒன்றிணைவோம் வா' - எதிர்க்கட்சிகளுக்கு மம்தா அழைப்பு

ABOUT THE AUTHOR

...view details