தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக பிரமுகர் தலையில் கல்லை போட்டு கொலை! - திமுக நிர்வாகி கொலை வழக்கு

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அருகே கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டுவந்த திமுக பிரமுகரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

திமுக பிரமுகரின் தலையில் கல்லை போட்டு கொலை
திமுக பிரமுகரின் தலையில் கல்லை போட்டு கொலை

By

Published : Jan 2, 2021, 9:11 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ரெட்டியூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (44). திமுக பிரமுகரான இவர் அப்பகுதியில் கட்டப்பஞ்சாயத்து, சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், பார்த்திபன் இன்று (ஜன.02) அதிகாலை வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் அவரை பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பார்த்திபனை சரமாரியாக வெட்டி, தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜோலார்பேட்டை காவல் துறையினர், பார்த்திபன் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக, பார்த்திபனுக்கு ஏற்கனவே கோயில் பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது தெரியவந்தது.

இதனால், முன்விரோதம் காரணமாக பார்த்திபனை கொலை செய்துள்ளார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் பீர் பாட்டிலால் குத்தி இளைஞர் கொலை - இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details