திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ரெட்டியூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (44). திமுக பிரமுகரான இவர் அப்பகுதியில் கட்டப்பஞ்சாயத்து, சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், பார்த்திபன் இன்று (ஜன.02) அதிகாலை வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் அவரை பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பார்த்திபனை சரமாரியாக வெட்டி, தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜோலார்பேட்டை காவல் துறையினர், பார்த்திபன் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.