தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதைத்த பெண்ணின் தலையை வெட்டி சென்ற போதை ஆசாமிகள் - புதைத்த பெண்ணின் தலையை வெட்டி சென்ற மதுப்பிரியர்கள்

திருப்பத்தூரில் புதைத்த பெண்ணின் தலையை போதை ஆசாமிகள் வெட்டி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதைத்த பெண்ணின் தலையை வெட்டி சென்ற மதுப்பிரியர்கள்
புதைத்த பெண்ணின் தலையை வெட்டி சென்ற மதுப்பிரியர்கள்

By

Published : Oct 26, 2021, 10:52 PM IST

திருப்பத்தூர்: பாரதிதாசன் நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் ரயில் நிலையத்தில் டீ வியாபாரம் செய்து வருகிறார்.

இவருடைய மனைவி மாதம்மாள் (45) உடல்நலக்குறைவால் கடந்த சனிக்கிழமை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாதம்மாள் உயிரிழந்தார். அவரை நேற்று (அக்.25) பாரதிதாசன் நகரில் உள்ள சுடுகாட்டில் உறவினர்கள் அடக்கம் செய்தனர்.

பின்னர், அவர்கள் அங்கிருந்து சென்ற பிறகு போதை ஆசாமிகள் சிலர் அடக்கம் செய்த மாதம்மாளின் தலையை வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பாமக பிரமுகர் கொலை வழக்கு - தேடப்பட்டுவந்த நான்கு குற்றவாளிகள் கைது

ABOUT THE AUTHOR

...view details