தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்! - Corona Social Distancing

திருப்பத்தூர்: பொதுவெளியில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

சமூக இடைவெளி திருப்பத்தூர் சமூக இடைவெளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் கரோனா சமூக இடைவெளி Social Distancing Thirupattur Social Distancing Corona Social Distancing District Superintendent of Police Vijayakumar
Social Distancing

By

Published : Mar 31, 2020, 11:45 AM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடைவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறிய 700 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 730 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சிவனருள் உத்தரவின்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் மாவட்டம் முழுவதும் 931 காவலர்களை கொண்டு 48 வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, 33 முக்கியச் சாலைகளில் ரோந்து பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதனிடையே திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி நகரப் பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளான காய்கறிகள், மளிகை பொருள்கள் விற்பனை செய்வதற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த இடங்களில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை பொதுமக்களின் பாதுகாப்பு நலன்கருதி சமூக இடைவெளி 3 அடி இடைவெளியில் பொருள்களை வரிசையில் நின்று வாங்கிச் செல்ல வேண்டும்.

இந்நிலையில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத நபர்களைக் கண்காணிக்க மாவட்ட அளவில் கரோனா சிறப்பு குழு அமைக்கப்பட்டு மூன்று காவல்துறை ஆய்வாளர்கள் தலைமையில் ஒன்பது உதவி ஆய்வாளர்களுடன் 94 காவலர்கள் நியமிக்கப்படுள்ளனர்.

எனவே பொதுவெளியில் சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடைவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சமூக இடைவெளியை கடைபிடிக்காத தனியார் மருந்தகத்துக்கு சீல்

ABOUT THE AUTHOR

...view details