தமிழ்நாடு

tamil nadu

திருப்பத்தூரில் அதிகரிக்கும் கரோனா - அச்சத்தில் மக்கள்!

By

Published : Jul 13, 2020, 9:56 PM IST

திருப்பத்தூர்: இன்று(ஜூலை 13) மேலும் 16 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 431ஆக உயர்ந்துள்ளது.

Corona increase in Tirupathur - people in fear!
Corona increase in Tirupathur - people in fear!

தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், இன்று (ஜூலை 13) ஒரே நாளில் 4 ஆயிரத்து 328 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரத்து 798ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று மேலும் 16 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கரோனா பாதித்தவர்களின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 431ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொற்று கண்டறியப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 234 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், கரோனாவால் மாவட்டத்தில் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மாவட்டத்தில் இதுவரை 22,323 பேருக்குக் கரோனா கண்டறிதல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் 650 பேர் முடிவுக்காக காத்திருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details