திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், டெல்லி சமய மாநாட்டிற்குச் சென்று திரும்பியவர்களில் இரண்டு பேருக்கு தொற்று ஏற்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இருப்பினும் கரோனா பாதித்த நபர்கள் சார்ந்த எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 52 பேர் தனியார் கல்லூரி மண்டபத்தில் ஏழு நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கடந்த 10ஆம் தேதி வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 51 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்று கண்டறியப்பட்ட நிலையில், டெல்லி மாநாட்டிற்குச் சென்று திரும்பிய ஆத்துமேடு ஹாஜி தெரு பகுதியைச் சேர்ந்த ஒருவரின் மனைவிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு வயது 50.