கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பணியில் மருத்துவ பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், பத்திரிகையாளர்கள் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக, நாடு முழுவதும் சுகாதார ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுவருகின்றன.
அதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் கரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் சுகாதார பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோருக்கு முகக் கவசங்கள், தொப்பி, கிருமி நாசினி, கையுறை உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் வழங்கினார்.