தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் சிவனருள் ஆய்வு - திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை

திருப்பத்தூர் : கரோனா பரவல் தடுப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் சிவனருள் தெரிவித்துள்ளார்.

collector inspection in govt. hospital and viewed covid 19 precaution measures
கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் சிவனருள் பேட்டி

By

Published : Apr 23, 2021, 11:02 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் கரோனா இரண்டாவது அலை தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் சிவனருள் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நடைபெற்று வரும் பணிகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் ஆம்பூர் ஸ்டார் பிரியாணி உணவகம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு 8 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ள இலவச ஆம்புலன்ஸ் சேவையை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இன்றைய நிலவரப்படி 652 பேர் கரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடங்கி வைத்த ஆட்சியர் சிவனருள்

மாவட்டத்தில் அஹ்ராகாரம் பகுதியில் சித்தா மருத்துவமனை தொடங்கப்பட்டு அங்கும் 50க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியினை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கரோனா பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா இரண்டாவது அலையை தடுக்கும் வகையில் வணிகர்கள் பொதுமக்களிடையே மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று, வணிகர்கள் இரவு 9 மணிக்குள் கடைகளை அடைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொள்ளப்பட்டது. வணிகர்கள் தானாக முன்வந்து 7 மணிக்குள் கடைகளை மூடி கொள்கிறோம் என ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.அதேபோல் பொதுமக்களும் நல்ல ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க:கரோனா விதிமீறல்: வியாபாரிகளுக்கு அபராதம்

ABOUT THE AUTHOR

...view details