அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் ஆகியோரை ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாத நிறைவு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் சோலையார் பேட்டையில் உள்ள ஒரு தனியார் திருமண வளாகத்தில், இந்த ஆண்டிற்கான தேசிய ஊட்டச்சத்து மாத நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இதில் அமைச்சர்கள் கே.சி. வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அப்போது சிறப்பாக செயல்பட்ட அங்கன்வாடி பணியாளர்களுக்கும், மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கும் அமைச்சர்கள் சான்றிதழ், கேடயம் ஆகியவற்றை வழங்கினர்.