திருப்பத்தூர்:செவிலியர் சிகிச்சையளித்ததால் ஒன்றரை வயது குழந்தை இறந்ததாக கூறி உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த நாயனசெருவு பகுதியை சேர்ந்தவர் கணேஷ் குமார், இவரது மனைவி சோனியா இவர்களுக்கு இரண்டரை வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், ஒரு வருட காலமாக சளி பிரச்னையால் கணேஷ் குமாரின் குழந்தை அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகின்றன. இதன் காரணமாக நாட்றம்பள்ளி பகுதியில் உள்ள தனியார் மருத்துவரான கிரிஜா என்ற மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, மீண்டும் குழந்தைக்கு இருமல் மற்றும் சளி அதிகமானது. இதனால், தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர் இல்லாத காரணத்தால் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் பணி மருத்துவர் இல்லாத காரணத்தால், மருத்துவரின் ஆலோசனையின் படி பணியில் இருந்த செவிலியர், ஒன்றரை வயது குழந்தைக்கு நெப்லைடேசன் (Nebulization) சிகிச்சை அளித்ததாக கூறப்படுகின்றது.
இதையும் படிங்க:செங்கல் சூளையில் இறந்த கிடந்த தம்பதி - புகை தாங்காமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பா?