தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வார்டு மெம்பர் பதவிக்குப் போட்டியிட்டவர் கள்ளச்சாராய வழக்கில் கைது - வார்டு மெம்பர் பதவிக்குப் போட்டியிட்டவர் சாராய வழக்கில் கைது

வாணியம்பாடியில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டவர் கள்ளச்சாராய வழக்கில் கைதுசெய்யப்பட்டு, அவரிடமிருந்து 150 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்செய்யப்பட்டது.

வார்டு மெம்பர் பதவிக்குப் போட்டியிட்டவர் சாராய வழக்கில் கைது
வார்டு மெம்பர் பதவிக்குப் போட்டியிட்டவர் சாராய வழக்கில் கைது

By

Published : Oct 4, 2021, 11:27 AM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த லாலா ஏரிப் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் மீது குட்கா, கள்ளச்சாராயம் விற்பனை செய்துவந்ததாக வாணியம்பாடி கிராமிய காவல் நிலையம், நகர காவல் நிலையங்களில்நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இவரைக் காவல் துறையினர் தேடிவந்தனர்.

சில மாதங்களாக தலைமறைவாக இருந்த கிருஷ்ணன் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆலங்காயம் ஒன்றியத்துக்குள்பட்ட வளையாம்பட்டு ஊராட்சி மன்ற ஒன்பதாவது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட வேட்புமனு தாக்கல்செய்துள்ளார்.

இவருக்கு தேர்தல் ஆணையம் சீப்பு சின்னம் ஒதுக்கியிருந்த நிலையில் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டுவந்துள்ளார். இந்நிலையில் வாணியம்பாடி லாலா ஏரிப் பகுதியில் நின்றுகொண்டிருந்தார்.

அப்போது வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் கிருஷ்ணனைக் கைதுசெய்து அவரிடமிருந்த இரண்டு லாரி டியுப்கள், கேனில் வைத்திருந்த 150 லிட்டர் கள்ளச்சாராயத்தைப் பறிமுதல்செய்தனர். சம்பவம் குறித்து தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ஆந்திராவைச் சேர்ந்த தலைமறைவு குற்றவாளி சென்னையில் கைது

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details