திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கன்னடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ். தொழிலதிபரான இவர் பணிநிமித்தமாக நேற்று இரவு சென்னை சென்றுள்ளார். இதனால், யுவராஜின் மனைவி உஷா தனது இரு பிள்ளைகளுடன் அருகில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று இரவு (டிச.11) வீட்டின் முன்பக்க கதவின் பூட்டினை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை திறந்து 8 சவரன் தங்க நகை , ரூ.10 ஆயிரம் ரொக்கம், ஒரு செல்ஃபோன் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.