தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாணியம்பாடியில் சைக்கிள் திருட்டு - திருப்பத்தூர் மாவட்ட குற்றச் செய்திகள்

வாணியம்பாடி பஜார் பகுதியில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை திருடிச் சென்ற சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat சிசிடிவி காட்சி
Etv Bharat சிசிடிவி காட்சி

By

Published : Aug 28, 2022, 10:44 PM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடி ஷாகிராபாத் பகுதியைச் சேர்ந்தவர் சையத் அஸ்லம். இவர் பிஜேஎன் சாலையில் எலக்ட்ரிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய மகன் சையத் சாலிம், அவருடைய தந்தையின் கடை அமைந்துள்ள பகுதியில் உள்ள ஒரு கண் கண்ணாடி கடை முன்பு தனது சைக்கிளை நிறுத்திவிட்டு கண் கண்ணாடி கடைக்கு உள்ளே சென்றுள்ளார்.

பின்னர் வெளியே வந்து பார்த்தபோது சைக்கிள் காணாமல் போனது தெரியவந்தது. பின்னர் அருகில் ஒரு கடையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்தார். அப்போது, இரண்டு இளைஞர்கள் சைக்கிளை திருடிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த சிசிடிவி காட்சிகளை வைத்து சையத் சாலிம் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சிசிடிவி காட்சி

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த நகர காவல் துறையினர், சைக்கிள் திருடனை தேடி வருகின்றனர். வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் ஒருசக்கர வாகனம், செல்போன் என தொடர்ந்து திருடு போகும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வரும் நிலையில், அதே வரிசையில், சைக்கிளை கூட விட்டு வைக்காமல் திருடிச் செல்லும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதையும் படிங்க:கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று சிறார்கள் மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details