திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, செட்டியப்பணுர் பகுதியில் அரசு மதுபானக் கடை (கடை . எண் : 11374) இயங்கி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அனைத்து விதமான கடைகளும் மூடப்பட்டிருந்தன.
டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி - குற்றவாளிகளுக்கு காவல்துறை வலைவீச்சு! - குற்றவாளிகளுக்கு காவல்துறை வலைவீச்சு
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே முழு ஊரடங்கை பயன்படுத்தி அரசு மதுபானக் கடையில் அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Attempted robbery at Tasmac store - Police crackdown on criminals!
இதனைப் பயன்படுத்திய அடையாளம் தெரியாத நபர்கள், அரசு மதுபானக் கடையின் பின்புறம் உள்ள சுவற்றை துளையிட்டுக் கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். அதேபோல் மதுபானக் கடை அருகில் உள்ள மற்றொரு அறையின் சுவற்றையும் துளையிட்டனர்.
சத்தம் கேட்டு அருகிலிருந்து அப்பகுதியினர் வருவதைக் கண்ட அடையாளம் தெரியாத நபர்கள், அங்கிருந்து தப்பியோடினர். இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் மதுபானக் கடை ஊழியர் அளித்த புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.