திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சிப்பகுதி, உசேன்புரா தெருவில் வசித்து வருபவர் விவசாயி, அஸ்லாம் பாஷா. இவர் அதே பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2008ஆம் ஆண்டு அவர் வசிக்கும் வீட்டு அருகில் வசித்து வந்த முமேஸ் பேகம் என்பவரிடம் இருந்து 2860 சதுர அடி காலியாக இருந்த வீட்டு மனையை, அவரது மனைவி பர்வீன் பெயரில் வாங்கியுள்ளார்.
வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவும் செய்துள்ளார். மேலும் அந்த இடம் உதயேந்திரம் பேரூராட்சி சர்வே எண் 615/25இல் பதிவாகியுள்ளது. இந்நிலையில் பலமுறை அந்த இடத்திற்கு பட்டா வேண்டி விண்ணப்பித்தும் அலுவலர்கள் காலம் தாழ்த்தி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் அவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளன. விவசாயத்தில் வரும் வருமானத்தில் பிள்ளைகளின் படிப்பு மற்றும் திருமணங்கள் செய்ததால் அவர் சொந்தமாக வாங்கிய காலிமனையில் ஒரு வீடு கட்ட முடியாத சூழல் நிலவியுள்ளது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு, அந்த காலியாக உள்ள வீட்டு மனை இடத்தை கிராம நிர்வாக அலுவலர் அமலா மற்றும் வார்டு உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் கொடுத்த தவறான தகவலின்பெயரில் அதிகாரிகள் ஆரம்பச் சுகாதார நிலையம் கட்டுவதற்காக வந்து பார்வையிட்டுச்சென்றுள்ளனர்.