திருப்பத்தூர்: வாணியம்பாடி ஆலங்காயம் பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவரது மகன் பாரதி. இவருக்கு அவசர பண தேவை இருந்துள்ளது. இதையடுத்து, ஆலங்காயம் -ஜமுனாமத்தூர் செல்லும் சாலையில் உள்ள பாரத் பெட்ரோல் பங்கில் மேலாளராக பணிபுரிந்து வரும் நவீன்குமாரிடம் கேட்டுள்ளார்.
ஆன்லைனில் பணம் அனுப்பிய மேலாளர்
நண்பர்களுடன் பெட்ரோல் பங்கிற்கு சென்ற பாரதி, போன்பே மூலமாக நவீன்குமாருக்கு ரூபாய் 500 அனுப்பிவிட்டு, கையில் 500 ரூபாய் பணமாகப் பெற்றுக் கொண்டுள்ளார். சுமார் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும், பெட்ரோல் பங்கிற்கு தன் நண்பர் அருணுடன் வந்த பாரதி, போன்பே மூலம் மேலும் பணம் வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
சேவை கட்டணம்
பாரதிக்கு பதிலளித்த அருண்,’ஏற்கனவே என்னிடமிருந்த பணத்தைக் கொடுத்துவிட்டேன். பெட்ரோல் பங்க் கணக்கில் இருந்து பணம் தர வேண்டுமெனில் சேவை கட்டணமாக 10 ரூபாய் வசூலிப்பார்கள்’எனக் கூறியுள்ளார்.