திருப்பத்தூர்:Tirupathur Advocate Protest: திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் முன்பு காக்கங்கரை பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன், சுமார் 20க்கும் மேற்பட்டோருடன் ஊழலுக்குத் துணை போவதாக வட்டார வளர்ச்சி அலுவலரைக் கண்டித்தும்; தன் மீது கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கறுப்புக்கொடி பிடித்து அமைதிப் போராட்டம் நடத்தினார்.
அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், 'எங்கள் பகுதியில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து சாலை போடுகிறார்கள். முறையற்ற வகையில் சுமார் 100 பேருக்கும் மேலாக இலவச வீடுகள் கட்டிக் கொடுத்ததாகப் போலி பில்கள் போட்டு ஊழல் செய்ததாகவும் கூறப்படுகிறது.
100 நாள் வேலைத்திட்டத்தில், 100 பேருக்கு மேல் போலி அட்டைகள் தயாரித்து பில் போடுவதாக கூறப்படுகிறது.
கவுண்டப்பனூர் செம்மன் குழி மேடு செல்லும் சாலையை எட்டு மாதத்திற்கு முன்பு தோண்டி அப்படியே கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்கள் போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து துறை சார்ந்த அனைவருக்கும் மனு கொடுத்துவிட்டோம். ஆனால் நடவடிக்கை இல்லை.
உயர் நீதி மன்றம் உத்தரவை மதிக்கவில்லை