தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆம்பூர் அருகே விபத்து: சர்க்கரை ஆலை காவலாளி உயிரிழப்பு! - Tirupati District News

திருப்பத்தூர் : ஆம்பூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூட்டுறவு சர்க்கரை ஆலை காவலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ராமமூர்த்தி
ராமமூர்த்தி

By

Published : Aug 13, 2020, 7:10 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் கொல்லப்புரத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (60). இவர் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் இவர் இன்று (13.08.20) காலை வழக்கம் போல் தனது இரவுப் பணியை முடித்துவிட்டு மிதிவண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஆம்பூர் அடுத்த வெங்கிளி, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அவர் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மிதிவண்டியில் மோதியதால், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அப்போது அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் சாலையில் முதியவர் இறந்திருப்பதாக ஆம்பூர் கிராமிய காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:யானையை விரட்டிய வனத்துறை அலுவலர்: யானையிடம் சிக்கி உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details