திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த நடராஜபுரம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டாவளத்தில் ரத்த வெள்ளத்தில் சுய நினைவை இழந்து இளைஞர் கிடந்து உள்ளார். தலை மற்றும் கை, கால் பகுதிகளில் பலத்த காயங்களுடன் இருந்த இளைஞரை மீட்ட அப்பகுதி மக்கள், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆம்பூர் அரசு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை முடிந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இளைஞர் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், இளைஞரிடம் விசாரணை நடத்தினர்.