திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பாரத் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் மாற்றுத்திறனாளியான தமிழ்ச்செல்வன். இவரது பாட்டி இறந்துவிடவே ஆலங்காயம் சாலையிலுள்ள ஊசி தோப்பு பகுதியில் கல்குவாரி அருகே திதி கொடுப்பதற்காகச் சென்ற இடத்தில் கல்குவாரி குட்டையில் தேங்கியிருந்த மழைநீரில் குளிப்பதற்காக மாற்றுத்திறனாளி தமிழ்ச்செல்வன் தனது செயற்கை காலை கரையில் கழற்றி வைத்துவிட்டு தண்ணீரில் இறங்கி குளித்துள்ளார்.
அப்போது, ஆழமான பகுதியில் சிக்கி தமிழ்ச்செல்வன் சத்தமிடவே அவரது தந்தை அவசர அவசரமாக உதவ முயலும் முன் தமிழ்ச்செல்வன் நீரில் மூழ்கினார்.