திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாச்சம்பட்டு காப்பு காட்டுப்பகுதியில் வனவிலங்குகளுக்கு மின்சாரம் வைத்து சிலர் வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், ஆம்பூர் வனச்சரக அலுவலர் மூர்த்தி தலைமையிலான வனத்துறையினர் மாச்சம்பட்டு காப்புக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.