தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 12, 2020, 11:57 AM IST

ETV Bharat / state

கடையின் பூட்டை உடைத்து பட்டாசுகள் கொள்ளை!

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே பட்டாசு கடையின் பூட்டை உடைத்து 70 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகள் மற்றும் 8 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

theft
theft

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (52). இவர் ஆம்பூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மொத்த விலைக்கு பட்டாசுகளை வாங்கி அதை விற்பனை செய்யும் கடை நடத்திவருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு இக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் கடையில் இருந்த சுமார் 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அனைத்து வகை பட்டாசுகளையும் 8 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

வழக்கம்போல் இன்று காலை கடையை திறக்க வந்த சந்திரன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக இது குறித்து ஆம்பூர் நகர காவல் துறையினருக்கு தகவல் அளித்தார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கொள்ளை போன கடையில் சோதனை மேற்கொண்டு இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details