தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

144 தடை உத்தரவை மீறி இறுதி சடங்கில் கலந்து கொள்ள சென்ற உறவினர்கள் - 144 தடை உத்தரவை மீறி இறுதி சடங்கில் கலந்து கொள்ள சென்ற உறவினர்கள்

திருப்பத்தூர்: அரசின் 144 தடை உத்தரவை மீறி இறுதி சடங்கில் கலந்து கொள்ள அச்சமில்லாமல் மினிவேன் முலம் பயணம் செய்த உறவினர்கள்.

police advice
40 person travel police advice

By

Published : Mar 27, 2020, 5:57 PM IST

Updated : Mar 27, 2020, 6:08 PM IST

உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியிலிருந்து ராணிபேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதிக்கு உறவினரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள அரசின் 144 தடை உத்தரவை மீறி, எந்தவித அச்சமும் இல்லாமல் மினிவேன் முலம் சென்ற 40 பேரை ஆம்பூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கிராமிய காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் தடுத்து நிறுத்தி மினிவேனையும் பறிமுதல் செய்தனர்.

144 தடை உத்தரவை மீறி இறுதி சடங்கில் கலந்து கொள்ள சென்ற உறவினர்கள்

அதனையடுத்து ஆம்பூர் டி.எஸ்.பி சச்சிதானந்தம் சம்பவ இடத்திற்கு வந்து கடும் எச்சரிக்கை விடுத்து அவர்களை சோளிங்கர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்து, அங்கு அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு மினிவேன் முலம் இறுதி சடங்கில் பங்கேற்க அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பாதீர்! மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

Last Updated : Mar 27, 2020, 6:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details