தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 18, 2022, 11:42 AM IST

ETV Bharat / state

ஒரே நாளில் பாம்பு கடித்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதி...சிறுவன் உயிரிழப்பு

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் பாம்பு கடித்த 3 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒரு சிறுவன் உயிரிழந்தான்.

ஆம்பூர் அருகே ஒரே நாளில் மூன்று பேருக்கு பாம்புக்கடி சிறுவன் உயிரிழப்பு
ஆம்பூர் அருகே ஒரே நாளில் மூன்று பேருக்கு பாம்புக்கடி சிறுவன் உயிரிழப்பு

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியை சேர்ந்தவர் மேகநாதன் இவரது 6 வயது மகன் 2ஆம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று இரவு தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த போது அச்சிறுவனை எதிர்பாராத விதமாக பாம்பு கடித்துள்ளது. உடனடியாக மயங்கிய நிலையில் சிறுவனை மீட்ட அவரது பெற்றோர் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் காரப்பட்டை சேர்ந்த குணசேகரன் என்பவரையும் பாம்பு கடித்த நிலையில், அவர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.

பெரியாங்குப்பத்தை சேர்ந்த தினேஷ் என்ற இளைஞரை பாம்பு கடித்த நிலையில், அவருக்கும் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: குடும்ப தகராறு...மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்

ABOUT THE AUTHOR

...view details