திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் மூவேந்திரன். இவரது மகன் முகேஷ் (18). டிப்ளமோ பட்டதாரி. இவரது உறவினர் பார்த்தசாரதி என்பவரின் மகன் அபி (18). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த அபி, கண் அறுவைச் சிகிச்சை செய்த தனது உறவினரின் பார்ட்டியைப் பார்க்க முகேஷ் வீட்டிற்கு வந்துள்ளார்.
பின்னர், முகேஷ், அபி இருவரும் பைக்கில் பால்னாங்குப்பம் பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு பால் ஊற்றும் பணியை முடித்து விட்டு, இரவு 8 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் அருகே செல்லும்போது, அதே பகுதியைச் சேர்ந்த கண்ணுப்பையன் என்பவரின் மகன்கள் தயாள் (36), குமார் (40), வடிவேல் என்பவரின் மகன் ராகுல் (21) ஆகிய மூவரும் மது போதையில் சாலையோரத்தில் நின்றிருந்தனர்.
அப்போது அங்கு பைக்கில் வந்த அபி, முகேஷை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து அபி, மகேஷ் வீடு திரும்பிய பின்னரும், அவர்களை பின் தொடர்ந்து தயாள் உட்பட 3 பேரும் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.