தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பத்தூரில் 11 சவரன் நகை கொள்ளை- காவல் துறையினர் வலைவீச்சு - thirupathur crime news

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை பகுதியில் அடுத்தடுத்து இரண்டு வீட்டில் தங்கம் மற்றும் பணம் திருடுபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

11 சவரன் நகை கொள்ளை
11 சவரன் நகை கொள்ளை

By

Published : Jan 11, 2021, 7:41 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் பழைய ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ஸ்டாலின்(76)‌. இவர் நேற்று (ஜன.10) நள்ளிரவு வழக்கம்போல் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் தூங்கியுள்ளார். பிறகு காலை ஸ்டாலின் மனைவி எழுந்துபார்க்கும் போது பீரோ உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் பீரோவில் வைத்திருந்த பொருள்களை பார்த்தபோது, 6 சவரன் நகை மற்றும் 10,000 ரூபாய் காணாமல் போயுள்ளது தெரியவந்தது.

இதேபோல் ஸ்டாலின் வீடு அருகே வசிக்கும் ஜோதாஸ் என்பவர் கோடியூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். தொடர்ந்து வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 5 சவரன் நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து ஸ்டாலின் மற்றும் ஜோதாஸ் இருவரும் ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு வீட்டில் 11 சவரன் நகை மற்றும் 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்து சென்றவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்

ABOUT THE AUTHOR

...view details