தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அறிவான்மொழி பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் இன்று தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு திருச்செந்தூர் - உடன்குடி சாலையில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த பிரவீன் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.