தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூரைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 27). கூலித்தொழிலாளியான இவருக்கும் 17 வயது சிறுமி ஒருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களது காதலை இரு வீட்டுப் பெற்றோரிடமும் எடுத்துக்கூறி திருமணத்திற்கு சம்மதம் வாங்கி உள்ளனர். இதைத்தொடர்ந்து ராஜேஷுக்கும், சிறுமிக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.
சிறுமிக்கு 18 வயது பூர்த்தி அடையாத காரணத்தால் வயது பூர்த்தியாகும் வரை திருமணத்திற்கு காத்திருக்கும்படி இருவீட்டு பெரியோர்களும் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் ராஜேஷ், தனக்கு நிச்சயமான சிறுமியுடன் ஊர் சுற்றி உள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கும் சிறுமியை அழைத்துச் சென்று அவருடன் பாலியல் உறவு கொண்டதாகத் தெரிய வருகிறது.