தமிழ்நாடு

tamil nadu

ஒட்டப்பிடாரம் அருகே பொதுச்சுவர் பிரச்னையால் பெண் வெட்டிக்கொலை!

By

Published : Oct 13, 2021, 9:23 PM IST

ஒட்டப்பிடாரம் அருகே நிலத்தகராறு காரணமாக, பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டப்பிடாரம் அருகே பெண் வெட்டிக் கொலை!
ஒட்டப்பிடாரம் அருகே பெண் வெட்டிக் கொலை!

தூத்துக்குடி: ஒட்டப்பிடாரம் அருகே உள்ள வடக்கு ஆவரங்காடு நடுத்தெருவைச் சேர்ந்தவா், பச்சை கனி. இவரது மனைவி முத்துலட்சுமி.

இவர்களது குடும்பத்தினருக்கும், அவரின் பக்கத்து வீட்டுக்காரரான ராமர் என்பவருக்கும் பொதுச்சுவா் தொடர்பாக அடிக்கடி நிலத்தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று (அக்.13) காலையில் முத்துலட்சுமி, தனது வீட்டின் முற்றத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, ராமருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ராமா், தனது வீட்டில் உள்ள அரிவாளால் முத்துலட்சுமியை சரமாரியாக வெட்டியுள்ளார்.

குற்றவாளிக்கு வலைவீச்சு

தாக்குதலில் படுகாயமடைந்த முத்துலட்சுமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மணியாச்சி துணை கண்காணிப்பாளர் சங்கர், ஒட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர் முத்துராமன் தலைமையிலான காவலர்கள் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு தப்பியோடிய ராமரை தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மேலும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரும் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.

இதையும் படிங்க:ஹோட்டலில் புரோட்டா சாப்பிட்ட தாய், மகள் மரணம்!

ABOUT THE AUTHOR

...view details