சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை சார்பில் முத்தையாபுரத்தில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தை கொடியசைத்து அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தியாக சீலர்களைப் போற்றும்வகையில் தமிழ்நாடு அரசு அவர்களது பிறந்தநாள் விழா விழாவை அரசு விழாவாக அறிவித்து கொண்டாடிவருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், நல்லசுவாமிகள், உமறுப்புலவர், சி.பா. ஆதித்தனார், சிவந்தி ஆதித்தனார் போன்றோருக்கு நினைவு மண்டபங்கள், நினைவுத் தூண்கள் அமைத்து அவர்களின் தியாகத்தைப் பெருமைப்படுத்தி உள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும் அவர்களை உடனடியாக கட்சியிலிருந்து நீக்கி விசாரணையில் எந்தவித குறுக்கீடும் செய்யாமல் இருந்தது இந்த அரசுதான். கனிமொழி எம்.பி. சொல்வதுபோல அதிமுக அரசு யாருக்கும் பாரபட்சமாக நடந்தது கிடையாது.