நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தார். அப்போது, தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நடிகர் விஜய் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியதற்கு வன்மம் வைத்துக்கொண்டு தான் தமிழ்நாடு அரசு அவரை பழிவாங்குகிறது.
விஜய் பேசிய கருத்துக்கு பலரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து விட்டார்கள். அதன் பின்னரும் பழிவாங்கும் நோக்கத்தோடு படத்துக்கு இடையூறு செய்வது நன்றாக இருக்காது. அரசின் இந்தச்செயல் இன்றைய தலைமுறையினரிடையே ஜனநாயகத்தின் மீது வெறுப்பை உண்டாக்கும். செல்வாக்கு பெற்ற கலைஞர்கள் சொல்வது சமூகத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இதனால் அதிகாரத்தில் உள்ளவர்கள், அவர்களுக்கு எதிராக எதிர்வினையாற்றுகிறார்கள். இதற்கெல்லாம் நடிகர் விஜய் அஞ்சக்கூடாது" என்றார்.