ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத்திறனாளி ஓய்வூதியரை எச்சரித்த கிராம நிர்வாக அலுவலர்... வைரல் ஆடியோவால் பரபரப்பு! - thoothukudi viral audio

தூத்துக்குடி: தவறான தகவல் அளித்து அரசின் உதவித்தொகையை பெற முயன்ற மாற்றுத்திறனாளி ஓய்வூதியரை கிராம நிர்வாக அலுவலர் எச்சரிக்கும் ஆடியோ பதிவு வைரலாகிவருகிறது.

கிராம நிர்வாக அலுவலர்
கிராம நிர்வாக அலுவலர்
author img

By

Published : Jan 14, 2021, 6:50 AM IST

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பணியாற்றி ஓய்வுபெற்று ஓய்வூதியம் பெற்று வரும் மாற்றுத்திறனாளி ஒருவர் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு தரப்பில் மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1,500 ஊக்கத்தொகையை பெறுவதற்காக முதலமைச்சர் தனிப் பிரிவிற்கு மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், தான் ஒரு மாற்றுதிறனாளி என்றும், ஜவுளிக் கடையில் பணியாற்றியதாகவும் வயது முதிர்வு காரணமாக தற்போது ஓய்வில் இருப்பதாகவும் கூறியுள்ளார். எனவே, தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிக்கு வழங்கும் ரூ.1500 உதவித்தொகையை தனக்கு வழங்கி உதவ ஆவண செய்யவேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு, கள விசாரணைக்காக தூத்துக்குடி பகுதி-1 கிராம நிர்வாக அலுவலர் பிரேமலதா என்பவரிடம் வந்துள்ளது. இந்த விண்ணப்பித்தில் உள்ள தகவல்கள் படி, மனுதாரார் வசிக்கும் பகுதியில் இவர் மாற்றுத்திறனாளி உதவித்தொகை பெற தகுதியானவரா என்று பிரேமலதா விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

அதில் மாற்றுத்திறனாளிகள் மாத உதவித்தொகைக்கு முதலமைச்சர் தனிபிரிவிற்கு மனு அளித்தவர் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பதும் அவரது மனைவி ஓய்வுபெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் என்பதும் தெரியவந்தது.

மேலும், அவர் ஓய்வூதியமாக மட்டும் சுமார் ரூ. 35 ஆயிரம் பெற்று வருவதாகவும் தகவல் கிடைத்தது. ஆனால், மனுவில் அளித்த தகவல்களில் அவர் மாற்றுதிறனாளி என்பதை தவிர மற்ற அனைத்து தகவல்களும் தவறானது என்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ந்துபோன கிராம நிர்வாக அலுவலர் பிரேமலதா உடனடியாக மனுதாரருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரிடம் எதுவும் தெரியாததுபோல் விசாரணை நடத்தினார்.

அப்போதும் அவர் உண்மையை மறைத்து தவறான தகவல்கள் கூறியதால் ஆத்திரமடைந்த கிராம நிர்வாக அலுவலர் பிரேமலதா, அவருடைய முழு பயடேட்டாவையும் அவரிடமே பளீரென எடுத்துக்கூறி கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.

வைரல் ஆடியோவால் பரபரப்பு

கிராம நிர்வாக அலுவலருக்கும ஓய்வூதியதாரருக்கும் இடையே நடந்த இந்த தொலைபேசி உரையாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி தூத்துக்குடி மாவட்டத்தில் வைரலாக பரவி வருகின்றது.

இதில், உண்மையை மறைத்து தவறான தகவல்கள் அளித்து உதவித்தொகை பெற முயன்ற ஓய்வூதியதாரருக்கு கடுமையான கண்டனங்களையும், தவறை தட்டிக்கேட்ட கிராம நிர்வாக அலுவலர் பிரேமலதாவுக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details